என் பின்னால் வா – மாவோ | மருதன் | புத்தகம் – விமர்சனம்

book image

புத்தகம் : என் பின்னால் வா – மாவோ
ஆசிரியர் : மருதன்
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
பக்கம் : 216
வாசிப்பு : Kindle

ஒரு கருத்தியலை நாட்டின் ஒட்டுமொத்த மக்களிடமும் கொண்டு செல்வது என்பது அவ்வளவு சாத்தியமில்லாதது. அதுவும் அம்மக்கள் அடிமை முறைக்குப் பழக்கப்பட்டு அறியாமையில் மூழ்கி இருக்கையில் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் மாவோ பெருமளவில் அதை சாத்தியப்படுத்திருக்கிறார்.

புரட்சி செய்வது, போராட்டம் நடத்துவது, கூட்டம் கூட்டி பேசுவது, மக்களிடையே கல்வி அறிவைப் புகட்டுவது, இராணுவத்தை பலப்படுத்துவது, கட்சியை வழி நடத்துவது, உள்நாட்டுச் சிக்கல்கள், வெளிநாட்டினரின் ஊடுருவல்கள் எனப் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறது செம்படை. சில சமயங்களில் தோல்வியும்.

ஓநாய் குலச்சின்னம் புத்தகம் படித்தபின் மாவோ பற்றியும், கலாச்சாரப் புரட்சி பற்றியும் தெரிந்து கொள்வதற்காகவே இப்புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் மாவோ பற்றியும், அப்போதைய சீனா பற்றியும் மட்டுமே இப்புத்தகத்தில் தகவல்கள் உள்ளன. கலாச்சார புரட்சி பற்றி இப்புத்தகத்தில் பெரிய அளவில் பேசப்படவில்லை.

இந்தப் புத்தகம் மாவோ பற்றி ஒரு சிறு மேலோட்டமான அறிமுகத்தைக் கொடுத்துள்ளது.

– சங்கமித்ரா

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started