Month: January 2021
-
பேருந்து நிலையம்
வேடிக்கை பார்த்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் எனக்கு அன்று ஏற்பட்டுவிட்டது. மதியம் கணினி வகுப்பை முடித்துவிட்டு காந்திபுரம் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நின்று இருப்பேன். வெகுநேரமாய் என் ஊருக்கான பேருந்து வரவேயில்லை. காலத்தைக் கொள்வதற்கு விழிகளுக்குக் கடிவாளமிடாமல் கருவிழியைக் கால்பந்து போல சுழலவிட்டேன். போகிறவர்களையும் வருகிறவர்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். “வெள்ளரிக்காய்… வெள்ளரிக்காய்…”, கூவிக்கொண்டிருந்தார் ஒருவர். நாற்பது வயது இருக்கும். சற்றே மெலிந்த தேகத்திற்குச் சொந்தக்காரர். ஆனால் அவர்…