தேசாந்திரி | எஸ். ராமகிருஷ்ணன் | புத்தகம் – விமர்சனம்

book image

புத்தகம் : தேசாந்திரி
ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்
பக்கம் : 256
பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம்

பயணங்கள் மூலம் கிடைக்கும் அனுபவங்களும் அவற்றைப் பகிர்வதன் மூலம் மற்றவர்கள் மனதில் உருவாகும் உணர்வுகளும் மிகவும் முக்கியமானது. யாரோ ஒருவருடைய பயணம் நமக்கு ஏன் மகிழ்ச்சியையும் ஆசையையும் ஊக்கத்தையும் சமயங்களில் பொறாமையையும் உண்டாக்குகிறது எனத் தெரியவில்லை.

இப்புத்தகத்தில் உள்ள சத்னாவில் ஒரு இரவு, நினைவில் எறிந்த கல், சீர்திருத்தச் சாமியாட்டம், உறங்கும் கடல் போன்ற சில கட்டுரைகள் மட்டுமே என்னை ஈர்த்தன. ஆசிரியரது ‘இரயில் நிலையங்களின் தோழமை’ என்ற புத்தகத்தை இதற்கு முன் வாசித்திருக்கிறேன். அப்புத்தகம் என்னைக் கவர்ந்த அளவிற்கு தேசாந்திரி ஈர்க்கவில்லை. ஆனால் இத்தனைக் கட்டுரைகளுக்கும் பின்பு உள்ள பயணங்கள் எனக்கு உத்வேகத்தை அளிக்கின்றன. இவ்வளவு வித்தியாசமான பயண அனுபவங்களை மனிதர்கள் சேகரிக்கிறார்கள், அப்படியான வாழ்க்கைச் சூழல் அவர்களுக்கு அமைந்திருக்கிறது அல்லது அமைத்துக் கொள்கிறார்கள் என்பதே என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தும் விஷயம்.

இப்புத்தகத்தில் உள்ள 41 கட்டுரைகளில் நிறைய இடங்கள், அனுபவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பயண விரும்பிகள் நிச்சயம் வாசிக்கலாம்.

எனக்குப் பிடித்த வரிகள்:

1) வாழ்வின் எளிய நிலையில் நாம் பிறந்திருந்தாலும் கூட, அறிவும் தொடர்ந்த உழைப்பும் நிச்சயம் நம்மை உலகின் உச்சிக்குக் கொண்டு செல்லும்.

2) எல்லா பக்கமும் திறந்து கிடக்கிறது உலகம். விருப்பமும் தேடலும் நம்மைக் கொண்டு செல்ல அனுமதிப்பது மட்டுமே நமது வேலை.

– சங்கமித்ரா

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started