Tag: நூல்
-
அறியப்படாத தமிழகம் | தொ. பரமசிவன் | புத்தகம் – விமர்சனம்
புத்தகம் : அறியப்படாத தமிழகம்ஆசிரியர் : தொ. பரமசிவன்பக்கங்கள் : 131வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் 💥தமிழர்களின் உணவு முறை, அதன் வரலாறு, நமது வாழ்வு முறை, நாம் கொண்டாடும் பண்டிகைகள், பொழுதுபோக்க நாம் விளையாடும் விளையாட்டுக்கள், பௌத்த மதம், சமண மதம் மற்றும் சித்தர்கள் குறித்த தகவல்கள், சமயங்களுக்கு இடையே நடந்த தத்துவச் சண்டைகள், கறுப்பு நிறம் குறித்து நமது இலக்கியங்களில் காணப்பெறும் தகவல்கள் எனஏழு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். 💥தமிழர்களின் உணவு முறை, அதில்…
-
பொய்த்தேவு | க.நா.சு | புத்தக விமர்சனம்
நூல் : பொய்த்தேவுஆசிரியர் : க.நா.சுபக்கங்கள் : 276வாசிப்பு : Bynge ⏳சாத்தனூரில் உள்ள மேட்டுத்தெருவில் பிறந்தவன் சோமு. சிறுவயதிலேயே ரங்க ராவிடம் வேலைக்குச் சேர்கிறான். எப்படியோ கல்வியும் கிடைக்கிறது. பணத்தையே லட்சியமாகக் கொண்டு உழைக்க ஆரம்பிக்கிறான். வெற்றியும் கிடைக்கிறது. ஒரு கட்டத்தில் பணத்தைப் பொய்த் தேவு(தெய்வமாக) ஆக நினைத்து அவற்றைத் துறக்கிறான். இறுதியில் அங்குமிங்கும் அலைந்து திரிந்து இறந்தும் போகிறான். இதுவே இப்புத்தகத்தின் மேலோட்டமான கதை. ⏳பெரும்பாலும் அதிகப்படியான விவரிப்புகள் என்னைக் கவர்வது இல்லை. ஆனால்…
-
தக்கர் கொள்ளையர்கள் | இரா. வரதராசன் | புத்தக விமர்சனம்
நூல் : தக்கர் கொள்ளையர்கள்ஆசிரியர் : இரா. வரதராசன் பக்கங்கள் : 315வாசிப்பு : Kindleவெளியீடு : கிழக்கு பதிப்பகம் ஒரு பயணம் மேற்கொள்ளும் போது நமது கவனம் பெரும்பாலும் எங்கு இருக்கும்? வேடிக்கை பார்ப்பதில்… சிரித்தபடியே கூட நடந்து வரும் இன்னொரு பயணி எதிர்பார்க்காத நேரத்தில் சுருக்குக் கயிறைக் கழுத்தை நோக்கி வீசி எறிந்தால்? உடலை இரண்டாக ஒடித்துத் தோண்டியிருக்கும் குழியில் போட்டுவிட்டு எந்தத் தடயமும் இல்லாமல் செய்துவிட்டால்?? கேட்பதற்கே எவ்வளவு பயங்கரமாக உள்ளது…கிட்டத்தட்ட எட்டு…
-
பூப்பு (மாதவிடாய் – சந்தேகங்களும் விளக்கங்களும்) | ரேணுகாதேவி | புத்தக விமர்சனம்
நூல் : பூப்பு (மாதவிடாய் – சந்தேகங்களும் விளக்கங்களும்)ஆசிரியர் : ரேணுகாதேவிபக்கங்கள் : 48வெளியீடு : வாலறிவன் பதிப்பகம் கருத்துக்கள் அதிக அளவில் பகிர்ந்து கொள்ளப்படும் இந்த நவீன உலகிலும் மாதவிடாய் ஒரு taboo topic ஆகவே உள்ளது. பெரும்பாலான பெண்கள் குழப்பத்துடனும் பயத்துடனும் தான் அவர்களது முதல் மாதவிடாயைக் கடந்து வந்திருப்பார்கள். இதுவரை வந்த sanitary napkins விளம்பரங்கள் பார்த்தாலே தெரிந்துவிடும் எத்தனை வலிகள்…எத்தனை சோகங்கள் என்று. பள்ளிப்பருவத்தில் மாதவிடாய் குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல்…
-
புயலிலே ஒரு தோணி | ப. சிங்காரம் | புத்தக விமர்சனம்
நூல் : புயலிலே ஒரு தோணிஆசிரியர் : ப. சிங்காரம்பக்கங்கள் : 323வாசிப்பு : Bynge 🛶கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்டது இப்புத்தகத்தை வாசித்து முடிக்க. பாதி புத்தகம் வரை எதற்கு இப்புத்தகம் வாசிக்கிறேன்? என்ற உணர்வோடு விருப்பம் இல்லாமலேயே வாசித்தேன். கொஞ்சம் கடினமான நடை. 🛶இரண்டாம் உலகப்போர் நடந்த காலக்கட்டத்தில் இக்கதை நடைபெறுவதாய் அமைந்துள்ளது. பெரும்பாலான அத்தியாயங்கள் இந்தோனேஷியாவை கதைக்களமாக கொண்டிருக்கும். ஆசிய வரைபடத்தை மேலோட்டமாக ஒரு முறை பார்த்துக் கொள்வது இப்புத்தகத்தை வாசிக்க உதவியாக…
-
ஓரிகாமி (காகித மடிப்புக் கலையின் கதை) | தியாக சேகர் | புத்தக விமர்சனம்
நூல் : ஓரிகாமி (காகித மடிப்புக் கலையின் கதை)ஆசிரியர் : தியாக சேகர்வெளியீடு : ஓங்கில் கூட்டம்பக்கங்கள் : 49வாசிப்பு : Kindle 🕊எங்கள் வீட்டின் அருகிலிருந்த நடுத்தர வயதுடைய பெண்மணி ஒருவர், பாசமலர் படத்தில் வரும் ‘மலர்ந்தும் மலராத’ பாடலை எப்போது கேட்டாலும் அழுவார். தாரை தாரையாக கண்ணீர் சிந்துவார். அப்போது என்னால் உணர்வுபூர்வமாக அதனை முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. சில நாட்களுக்கு முன்பு ஒரு பதிவில் கீழ்க்கண்ட வரிகளைப் படித்தேன். 🕊”நான் உங்கள்…
-
அபிதா | லா.ச.ரா | புத்தக விமர்சனம்
நூல் : அபிதாஆசிரியர் : லா.ச.ராபக்கங்கள் : 112வாசிப்பு : Bynge லா.ச.ரா அவர்களின் வேறு புத்தகங்களைப் படிக்காமல் அபிதாவை ஏன் வாசித்தேன் என்ற உணர்வுதான் மேலோங்கி உள்ளது. கதாநாயகன் அம்பி வயதான காலத்தில் மனைவியுடன் தன் சொந்த ஊருக்கு வருகிறான். தன் பழைய காதலி இறந்து போன விஷயம் தெரிய வருகிறது. காதலியைப் போலவே தோற்றம் உள்ள அவள் மகள் மீது காதல் கொள்கிறான். அம்பியின் மனநிலை என்ன என்று கூறிக்கொண்டே கதை நகரும். இதென்ன…
-
நான் நாத்திகன் ஏன்? | பகத்சிங் | புத்தக விமர்சனம்
நூல் : நான் நாத்திகன் ஏன்?ஆசிரியர் : பகத்சிங் (தமிழில் ப.ஜீவானந்தம்) பக்கங்கள் : 54 வெளியீடு : எதிர் வெளியீடு வாசிப்பு : Kindle ஒரு கொள்கையைப் பின்பற்றுவது என்பது யாதெனில் நம் மூளையுடன் நாமே நடத்தும் ஒரு யுத்தம். நான் நாத்திகன் ஏன் என்ற இக்கடிதத்தை எழுதும்போது பகத்சிங்கின் வயது 22 (அப்போது சிறையில் இருந்தார். 23-ஆம் வயதில் தூக்கிலிடப்பட்டார்). இதுதான் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒரு கொள்கையைக் கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கும் துவக்க…
-
பொய்மான் கரடு | கல்கி | புத்தக விமர்சனம்
நூல் : பொய்மான் கரடு ஆசிரியர் : கல்கி பக்கங்கள் : 128வாசிப்பு : Bynge ராஜா காலத்து கதையானாலும் சாதாரண மக்கள் பற்றிய கதையானாலும் ஒரு திரைப்படத்தை பார்த்த அனுபவத்தைக் கல்கியின் எழுத்துக்கள் மறக்காமல் ஏற்படுத்திவிடுகின்றன. 2 அல்லது 3 மணிநேரத்தில் வாசித்து விடக்கூடிய குறுநாவல். திரில்லர் வகையைச் சேர்ந்தது. இலகுவாக வாசிக்க விருப்பப்படும்போதோ அல்லது கடினமான புத்தக வாசிப்புக்கு இடையிலோ இப்புத்தகத்தைத் தாராளமாய் வாசிக்கலாம். எளிய நடை. Absolute page turner. கடைசி அத்தியாயத்தில்…
-
வாசிப்பது எப்படி? | செல்வேந்திரன் | புத்தக விமர்சனம்
நூல் : வாசிப்பது எப்படி?ஆசிரியர் : செல்வேந்திரன் பக்கங்கள் : 94வெளியீடு : Kindle நீங்கள் இதுவரை 100+ புத்தகங்கள் வாசித்து இருக்கலாம். இருப்பினும் ஒரு வங்கி படிவத்தைப் பூர்த்தி செய்யும்போதோ அல்லது தெரியாத ஒரு நபரிடம் திடீரென பேசும் சூழல் ஏற்படும்போதோ தடுமாறி இருந்திருக்கலாம் (ஆம் எனில் மட்டும் இப்பதிவைத் தொடர்ந்து வாசியுங்கள்) இப்புத்தகத்தை வாசிக்கையில் புத்தகங்கள் வாசிப்பது மூலம் நான் பெற்றது என்ன என்று யோசித்தேன். 1. கற்பனை உலகங்களில் வாழ முடிந்தது 2.…